Monday, February 28, 2011

கமல்ஹாசனின் கவிதை - "மன்மதன் அம்பு" வில் இருந்து

"மன்மதன் அம்பு" படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் சொந்தக்கவிதை

ண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா

ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக் கொள்

கூட்டல் ஒன்றே குறியென்றான பின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக்கொள்

....

கலவி செய்கையில் காதில் பேசி

கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்

வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போலக்

கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும்

கூட நின்றுவன் உதவிட வேண்டும்

....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென

வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்

....

இப்படிக் கணவன் வரவேண்டும் என

ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்

வரந்தருவாள் என் வரலட்சுமியென

கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு

....


தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்

முற்றும் துறந்து மங்கையரோடு

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

...

மூத்த அக்காள் கணவனுக்கு

முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

அக்காளில்லா வேளையில் அவன்

காளத்தி வேண்டும் என்றான்

...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு

வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?

உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்

அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்

வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

அதுவும் இதுவும் உதுவும் செய்யும்

இனிய கணவர் யார்க்குமுண்டோ?

உனக்கேனுமது அமையப் பெற்றால்

உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்

நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்

ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!


- கவிஞர் கமல்ஹாசன்

No comments:

Post a Comment