Thursday, November 17, 2016

பள்ளிக்கூடம் = கடிதம்

கொல்கத்தா பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று...
* அன்பார்ந்த பெற்றோர்களே!*
*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*
*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*
*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*
*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*
*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.*
*அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்*
*அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*
*ஒரு இசைஞானி இருப்பான்*
*அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*
*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்*
*அவனது உடல் நலனே முக்கியமன்றி*
*பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*
*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* *எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*
*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*
*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*
*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*
*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*
*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள்.. பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*
*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*
*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*
*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
நன்றி....

பபி.

ஆசிரியருக்கு ஒரு தந்தையின் கடிதம்..!!

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில்
சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு கடிதம்
எழுதினார்! அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்…

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்,
வெற்றியைக் கொண்டாடவும்
என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர் களிடம் உறுதியாகவும்
நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம்
அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை
அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற
அவனைப் பழக்குங்கள்…

இதை எழுதிய தந்தை யார்?
ஆபிரஹாம் லிங்கன்

No comments:

Post a Comment