உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது
உண்மையான வேகம்
எப்போதும் மெதுவானது.
மிகவும் உணர்ச்சியுள்ளது,
மரத்துப் போனது.
பெரிய பேச்சாளன், ஊமை.
ஏற்ற வற்றம், ஒரே அலையில்தான்.
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி.
மிகப் பெரியதென்பது,
மிகச் சிறியதுதான்.
எல்லாம் கொடுப்பவனே,
எல்லாம் பெற்றவன்
வாழ்வதற்காக செத்துப்போ
சாவதற்காக வாழ்ந்திரு’
-மிர்தாதின் புத்தகம்-
No comments:
Post a Comment