ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவியோ , அல்லது ஒரு வேலை உணவுக்கு பொறுப்பேற்று போனாலோ தயவு செய்து கீழ் கண்டவற்றை செய்யாதீர்கள் .
1. இரக்க குணத்தை வெளிக்காட்டி பாவ படாதீர்கள்
2. பரிசு பொருட்களை அவர்கள் கேசுவலாக விளையாடிக் கொண்டிருக்கும் போது கொடுங்கள் , நிர்வாகம் அனுமதித்தாலும் ஒரு போதும் வரிசையில் நிற்க வைத்து உணவோ பரிசோ கொடுக்காதீர்கள்
3. உங்கள் குழந்தை பிறந்த நாளுக்குகாக வேண்டி நீங்கள் போய் இருந்தால் அங்கு வைத்து கேக் வெட்டாதீர்கள்
4. காட்சி பொருளாய் , மிருககாட்சி விலங்காய் போட்டோ எடுக்காதீர்கள் , அதை பொதுவில் பதியாதீர்கள் , போகிறவர் எல்லாம் உணவு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டு வந்தால் அவர்கள் மனநிலை என்ன நினைக்கும் ? வலது கையால் செய்தது இடது கைக்கு கூட தெரிய தேவையில்லை , மெமரிஸ் க்காக கேசுவலா ஒரு போட்டோ வேணும்னா!
5. பெரும் தொகையை
நிர்வாகத்திடம் இயன்றவரை கொடுக்காமல் நீங்களே நேரடியாக போய் வேண்டியதை செய்யுங்கள் , பணத்தை விட செலவிடும் நேரம் முக்கியம் .
6. Prayer ஹால் மாதிரி இல்லாமல் முடிஞ்சா பார்டி ஹால் மாதிரி டான்ஸ் ஆடி பாட்டு பாட சொல்லி கூத்தடிச்சிட்டு வாங்க .
சிம்பிளா சொல்லனும்னா எதுவுமே well organized event மாதிரி இருக்க கூடாது !
வாசுகி பாஸ்கர்
No comments:
Post a Comment