Friday, November 18, 2016

வைத்துக்கொள் மசக்கைக்கு...


போய் விழுந்தாய் அவன்காலில்
பூலோகக் கடவுளென
புண்ணியம் கிடைக்குமென

ஊத்தவாய் ஒப்பிக்கும்
உருப்படா வேதங்களை
பீத்தினான் ஆசியென்று
பிதற்றினான் ஏதேதோ

காவி அணிந்த பயல்
கவர்மெண்டு கங்காணி
கடவுள் பெயர் சொல்லி
கற்பழிக்கும் பெண்பித்தன்

தருகிறான் திருநீறை - பக்தையே
வைத்துக்கொள் மசக்கைக்கு

- யுகபாரதி (yugabhaarathi@yahoo.co.in)

No comments:

Post a Comment